புதன், 18 ஏப்ரல், 2012

பொய்யர்

இதை நான் எழுதவில்லை .நண்பர் றஸ்மின் தனது இணையதளத்தில் எழுதியதை காப்பி பேஸ்ட் பண்ணியுள்ளேன் .இது சிலரை சுட்டால் நான் பொறுப்பல்ல 
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 6.

சிலர் அடுத்தவர்கள் பற்றி எதைக் கேள்விப் பட்டாலும் உடனே அதைப் பரப்புவதற்கு முன்வந்து விடுவார்கள். அதைப் பற்றி ஆய்வு செய்வதோ, அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதோ இல்லை. உடனே அதைப் பற்றி பரப்ப ஆரம்பித்து விடுவர்.

இப்படி யாராவது இந்தக் காரியத்தில் ஈடுபட்டால் அதுவே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று நபியவர்கள் தெளிவாக்குகின்றார்கள்.

பொய் என்பது திட்டமிட்டு உருவாக்கி சொல்வது மட்டுமல்ல கேள்விபட்டதை எல்லாம் ஆய்வு செய்யாமல் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றுதான்.

உலகின் சிறு இன்பத்திற்காக மறுமையில் திவாலாகலாமா?

"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, "யாரிடத்தில் பணமும்பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகைநோன்புஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான்.  இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 4678

திவாலாகியவர்கள் யார் என்று நபி கேட்டவுடன், அனைத்து ஸஹாபாக்களும் பொருளாதாரத்தில் குறையுள்ளவர்கள் தான் திவாலாகிப் போனவர்கள் என்று பதில் சொல்கிறார்கள் ஆனால் நபியவர்களோ அதை மறுத்து உண்மையில் திவாலாகுதல் என்றால் என்ன என்பதை விபரிக்கிறார்கள்.

அவதூறினால் பாதிக்கப்படுபவனின் மன நிலையில் இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்தவர்கள் பற்றி நாம் கொள்ளும் தீய எண்ணங்கள் காரணமாக அவர்கள் பற்றி அவதூறு செய்திகளை அள்ளி வீசுகின்றோம். அப்படி அவதூறு செய்திகளை சொல்லும் போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் கவுரவத்தை பாதுகாக்க, மரியாதையை இழக்க விரும்பாமல் அவர்கள் படும் பாட்டை அவரவர் அனுபவித்தால் தான் உண்மை புரியும்.

உலகில் எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அல்லாஹ் அழகியதொரு வழிகாட்டுதலைத் சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

எவன் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அதை யார் சொன்னார்? எப்போது சொன்னார்? சொன்னாரா இல்லையா? இவன் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் ஆய்வு செய்து அதன் பின் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு தான் நாம் அதைப் பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர எவன் என்ன சொன்னாலும் அதை நம்பி உடனே அதனைப் பரப்ப முற்பட்டால் அவனை விட பொய்யன் யாரும் இல்லை.

ஆக அன்பின் சகோதரர்களே நாம் உண்மையான முஃமின்களாக அல்லாஹ்வை நம்பியவர்களா இருந்தால் மற்றவர்கள் மேல் தேவையற்ற கெட்ட எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், அவதூறான செய்திகளைப் பரப்பாமலும் வாழ்ந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

நன்றி 'சகோதரர் ரஷ்மின் 

சனி, 14 ஏப்ரல், 2012

வல்லரக்கனின் சாதனை.

வல்லரக்கன் சகோக்கள் அடித்துவிட்ட பொய்களிலும் புரட்டுகளிலும் மயங்கிய ஒரு அமைப்பின் முன்னால் கிளை நிர்வாகி ஒருவர் ;வல்லரக்கன் பிரச்னை பற்றிய விவகாரத்தில் வரம்பு மீறி நடந்து கொண்டார்.இந்த நிர்வாகியை வல்லரக்கன் தனது உறவினரின் உறவினர் என்ற முறையில் உறவு கொண்டாடி பொய்களை கட்டவிழ்த்துவிட்டார். அத்தனைகளையும் உண்மை என்று நம்பி அவர் வெம்பினார்.ஆக இறுதியில் அவர் அவமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இப்போது மாநில அமைப்பில் நகர செயலாளராக இருந்தவர் இன்று தெரு அமைப்பில் மாநில செயலாளராக மாறிவிட்டார்.இது வல்லரக்கனின் சாதனை.ஒரு அமைப்பின் மீதும் அதன் தலைவர் மீதும் காயல்பட்டனத்துக்காரர்கள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும் மிக கேவலமாக புறம் பேசுவதும் வழமையாகக் கொண்ட வல்லரக்கன் இன்று அந்த அமைப்பின் உறுப்பினர்களையும் காயல்பட்டினத்துக் காரர்களையும்  தேடி விவகாரம் பேசிட துணைக்கு அழைப்பது ஏனோ?அவர்கள் மத்தியில் அமைப்பில் உள்ள மற்றவர்கள் பற்றி பொய்களை பரப்புவதும் அதன் மூலம் அவர்களிடையே பிரச்னைகளை ஏற்படுத்துவதும் அவர் ஆதாயம் பெற வழிகாண முயற்சிக்கிறார் .காயலான் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதும் அவர்களை தரக் குறைவாக பேசுவதும் வல்லரக்கனே !அதை அவருக்கு ஞாபாகபடுத்தவே அவர் வாய்மொழி வார்த்தையான "காயலான் 'என்று குறிப்பிட்டிருந்தேன்.

இன்றைய பார்வையாளர்கள்.
நாடுகளின்படி பக்கக்காட்சிகள்
சவூதி அரேபியா
24
இந்தியா
5
ஐக்கிய அரபு கூட்டாட்சி
4
ஐக்கிய அமெரிக்க குடியரசு
1

புதன், 11 ஏப்ரல், 2012

வல்லரக்கன் வருகிறார்,பராக் ,,பராக்க்


செய்தி 2 .வல்லரக்கன் ரியாத்திலிருந்து சென்னை வருகிறார்.அங்கிருந்து நெல்லை வந்ததும் டிஎன்டிஜே மற்றும் பத்தொன்பது அமைப்பு பிரதிநிதிகளுடனும் ,அதாவது ஒவ்வொரு அமைப்புக்கும் இரண்டு பிரதிநிதிகள் என்ற வீதத்தில் அறுபது லட்சரூபாய் சீரக வியாபார விவகாரத்தை எழுப்ப உள்ளார் என்பதையும் அவர் சார்பாகவும் இடிமாங்கரை மாநராட்சி சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம் .அவர் சொன்ன பல விஷமங்களை அவரே பொய்களாக நிருபித்துகாட்டுவார்.இன்சால்லாஹ்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஐ டாக்டர் மனச்சிதைவு ஒசங்காச்சா

////இவனை கவுன்சிலர் வேட்பாளராக தேர்வு செய்ய வைத்து, ஓட்டுக்கு நூறு ,இருநூறு என்று கொடுத்து போதாத குறைக்கு சாராயம் வாங்கி  கொடுத்து ,கோயிலுக்கு பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது [இதை அவன் மறுக்க வேண்டும்] ஊரில் உள்ள அசல்திமுக காரனைஎல்லாம் ஆலோசிக்காமல் அவர்களின் வேதனையில் போட்டியிட்டு இந்த மானங்கெட்ட ஒசங்காச்சா கவுன்சிலர் ஆக ஆகாவிட்டால் கூடங்குளம் அணுமின் நிலையம் வெடித்துவிடுமா?///


இது எழுதப்பட்டு 15  நாட்களாகிவிட்டன. அதற்கு பதில் சொல்ல திராணி இல்லாத ஒசங்காச்சா தத்து பித்து என்று மூளை குழம்பியவன் போல உளறுகிறான்.இவனை சுன்னத் ஜமாத்தின் ஆலோசகராக ஏற்றுக் கொண்ட அவனுடைய அருமைத்தம்பிகள் ,நாங்களும் தவ்ஹித்வாதிகளே என்று சொல்லிக் கொள்ளும்  அவனுடைய அந்த தம்பிகள்,ரியாத்தில் ,தமாமில் உள்ள அந்த தம்பிகள் இப்போது முன்னாள் தம்பிகளாக மாறியிருக்க  வேண்டும் அல்லது அவனிடம் இது பற்றி விளக்கம் கேட்க வேண்டும். ஒரு அரசியல்வாதியாக இருப்பவனிடம் பண வெறியும் அந்த வெறியை தணித்துக் கொள்ள பதவி வெறியும் அவனிடம் பேயாட்டம் போடும்.அப்போது அவர்களுக்கு பள்ளிவாசலை இடித்தால்அது சாதகாமக் இருக்கும் என்றால் அதை செய்யவும் தயங்கமாட்டார்கள்.ஊரை இரண்டாக்கினால் அவனுக்கு சாதகம் என்றால் அக்காரியத்தையும் ஊர் ஒற்றுமைபற்றி பேசியே ஊரை இரண்டாக்குவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச முடியாது.ஏனெனில் அரசியல் ஒரு சாக்கடை. அயோக்கியர்களின் கடைசி புகழிடம் அரசியல்.
ஊர்ஜமாத் முடிவு செய்தால் அனைத்து மக்களும் நமக்கு வாக்களித்து பஞ்சாயத்து தலைவராக ,கவுன்சிலராக நாம் ஆகிவிடலாம் என்ற அற்ப பகல் கனவுடன் ,பழைய திமுகக்காரனுடன் சேர்ந்துகொண்டு ஒரு வருடத்திற்கு மேலாக அதுக்குரிய வேலைகளை செய்து, வக்பு போர்டு மூலமாக பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றி ,காசு பணம் செலவழித்து ,அதாவது உழைத்து ,உழைத்து ஊரை அடித்து உலையில் போட்ட காசில் கிடைத்த பங்கை ,பத்திரிக்கைகளில் வந்த மோசடி வித்தைகளை செய்து வந்த காசுகளின் பங்கை வைத்துக் கொண்டு தனக்கு வேண்டியவர்களை நிர்வாகி களாக வைத்துக் கொள்ள திட்டமிட்டான் ஒசங்காச்சா .இதுவரை ஊர் நலனில் ஒரு அடி கூட எடுத்து வைக்காத ,அதுவரை தொழ வராத ,அதன் பின்னர் சிலகாலம் தொழ வந்து ,பின்னர் நிறுத்திக்கொண்ட ,ஒருவரை ,குரான் வசனத்திற்கு மாற்றமாக ,தனது இச்சைப்படி நிரவாகியாக்கி ,தன்னையும் தனது அடிவருடியையும் பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர் ஜமாஅத் வேட்பாளராக போட்டியிட்டான் 
சூழ்ச்சிகாரனுக்கேல்லாம் சூழ்ச்சிக்காரனாக இறைவனை மறந்து இவன் போட்ட சூழ்ச்சியை அல்லாஹ் ,சிதறடித்தான் .இறைவன் நாடினால் இன்னும் அவனை பற்றிய பல உண்மைகள் அல்லாஹ் வெளிக்கொனருவான்.
அவன் என்னைப்பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஒன்று அவன் ஆதாரம் தரவேண்டும் அல்லது அதுபற்றிய உண்மைகளை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்ய வேண்டும் .இல்லையெனில் நான் அவன் கூறிய குற்றசாட்டுகளை மறுத்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் மறுக்க தயாராக உள்ளேன் என்றும் ,அது போன்று நான் அவனைப்பற்றி கூறிய குற்றச்சாட்டுகளுக்குநான் ஆதாரம் வைக்க வேண்டும் ,இல்லையெனில் அது உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் சத்தியம் செய்ய வேண்டும்.அதற்கும் வாய்ப்பு இல்லைஎன்றால் நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று அவன் சத்தியம் செய்ய வேண்டும் என்று பல முறைகள் பகிரங்கமாக அழைத்த பின்னரும் மவுனியாக இருந்து மானத்தை இழந்த ,அல்லது மானத்தை சாகடித்த இவனுக்கு சூடு,சொரணை ,வெட்கம் எதுவும் கிடையாது என்பதை அவனது பிளாகரில் பார்த்தால் தெரியும் .அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் புகழுக்கு உரியவன்.
ஒசங்காச்சாவின் செத்துப்போன மானம் . 
ஒ.கா வின் மானத்திற்கு ,சுன்னத் விட்ட ஜமாத்தின் கொள்கைப்படி கத்தம் பாத்திகா ,நாற்பது பாத்திகா வருஷ பாத்திகா ஓதுவதா?அல்லது திமுகவின் கொள்கைபடி வருடந்தோறும் நினைவு அஞ்சலி செலுத்தி நினைவு நாள் கூட்டம் நடத்துவதா? என்பதிலே அவனின் ரசிக கண்மணிகளான சம்பா கூனி கூட்டத்திற்கு பெரிய குழப்பமே ஏற்பட்டது.அவர்களிடையே இதனால் சண்டை வரும் அளவுக்கு பிரச்னை வந்ததால் ஒ.கா வே நேரடியாக தலையிட்டு தீர்வை சொன்னான்.கத்தம் பாத்திகா நாற்பது பாத்திகா ஓதாவிட்டால் சுன்னத் விட்ட ஜமாஅத் மக்கள் தன்னை நஜாத்க்காரன் என்று கூறிவிடுவார்கள் என்று பயந்து ,அவர்களை குளிரவைக்க ,இடிமாங்கரை மானகராட்ச்சிக்கு வெளியே உள்ள சம்பாகூனி  கூட்டம் சு.வி,ஜமாத்தை ஏமாற்றி அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டியுள்ளதால் அதற்கேற்றவாறு கத்தம் பாத்திகா நாற்பது, வருஷ பாத்திகா ஓதவேண்டும் என்றும் இடிமாங்கரை எல்கைக்கு உட்பட்ட மக்கள் நினவு அஞ்சலி நினைவுநாள் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தனது அற்புதமான குழப்ப கொள்கை பற்றி தெளிவான விளக்கம் மக்களிடம் அளித்தான் .இந்த அருமையான  கொள்கை விளக்கத்தை  அறிந்த பல அரசியல்வாதிகள் எல்லாம் அரண்டுவிட்டனர். ஆனால் அவனது அன்பு தம்பிகளுக்கோ அவனது அற்புதமான யோசனை கேட்டு புல்லரிக்கவில்லை.இதனால் இடிமாங்கரையில் உள்ள புல்களை புடுங்கி கையில் தேய்த்து அரிக்க வைத்தனர்.மேலும் இடிமாங்கரை திமுகவினர் ,தங்களது அண்ணன் ஒசன்காச்சாவை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது ,டாக்டர் கலைஞர் கருணாநிதி போல ஒசங்காச்சாவை யும் டாக்டர் மனச்சிதைவு பட்டம் கொடுத்து அழைக்கவும் முடிவு செய்து  எல்கைகுட்பட்ட இடத்தில் உள்ள எடக்கு துறை முடக்கு வீதியில் உள்ள டசன்பக்கீர்சாபாவா பல்கலைகழகம்   துணை வேந்தரை டாக்டர் பட்டம் வழங்க வற்புறுத்தியது . அவரும் தனது பல்கலைகழக [பைசாவுக்கு ]பெறாத ஆசிரியர்களை அழைத்து ஒ.கா வுக்கு டாக்டர் பட்டம் வழங்க உரிய ஆவணங்களை தயார் செய்யக் கூறினார். [பைசாவுக்கு] பெராசிரியர்கள் ஒ.கா வின் பலவிதமான சேவைகளை ,எழுத்தாற்றலை ஆய்வு செய்து பார்த்தபொழுது ////  ஹை...... சூப்பர் மாட்டிகிட்டான்.

   ஹை மாட்டிகிட்டான்....

SATURDAY, JANUARY 21, 2012


ஹய் மீண்டும் மாட்டிகிட்டான். ஆனா ஒண்ணுங்க 
அவன் கோபத்தில்தான் பொய்யை பொய் 
என்று நிறுபிக்கிறமாதிரி உளர்றான்.//
 என்ற வரிகள் அவர்கள் சிந்தனைகளை கவர்ந்தது. இந்த வரிகளே அவனுக்கு பட்டம் கொடுக்க போதும் என்று முடிவு செய்து அவனுக்கு வெறும் டாக்டர் பட்டம் கொடுக்காமல் ஐ டாக்டர்  என்று பட்டம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.மேலும் ஏற்கனவே நமதூரில் இ டாக்டர் இருப்பதால் இப்போது ஐ டாக்டர் 'என்பது பொருத்தமாக இருக்கும் என்று பெருமை பட சிலர் கூறினார்கள்.
இனி சம்பா கூனி கூட்டம் ஐ டாக்டர் மனச்சிதைவு ஒசங்காச்சா  என்று மட்டுமோ அல்லது ஐடாக்டர் மனச்சிதைவு என்றோ அழைக்க வேண்டும் என்று உறுதிபட தெரிவித்துக் கொண்டனர். [முடிந்தது ]

சனி, 4 பிப்ரவரி, 2012

முடிவுரை முடியவில்லை .

///இப்போ நம்ம கதைக்கு வருவோம். அப்புறம் தொடரும் போட்டு விட்டு மூன்று நாளாய் ஆளை காணோம்.நான் தான் உழைத்து சாப்பிட வேண்டிய நிலை. எனக்கு தான் வேலை இருந்ததினால் மூன்று நாளாய் நெட்டை தொடவில்லை. அங்கே என்ன ?
உங்களிடமிருந்து (குணமாக்குமுன், குணமாகுமுன்) இன்னும் நிறைய 
எதிர்பார்கிறேன், எதிர்பார்க்கிறோம். என்ன புரியுதா? இன்னும் நிறைய................ ம். எடுங்கள் பேனாவை......
(யாரும் தப்பா நினைக்காதீங்க. இவனை இப்படித்தான்......... அப்போ தான் 

எல்லோருக்கும் Timepass.)///

வியாழன், 26 ஜனவரி, 2012

ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள்

இவனிடம் பள்ளிகணக்கை கள்ளத்தனமாக கேட்டது பற்றி விசாரித்தபொழுது ,பள்ளியின் கல்வித்தரம் சரியில்லை என்றும் கடந்த பத்தாவது வகுப்பு தேர்வில் முன்னூறு மதிப்பெண்களுக்கு மேல் யாரும் எடுக்கவில்லை என்று கூறினான்.அச்சமயம் தேர்வு எழுதிய 27  பேர்களில் நான்கு பேர்களைத்த் தவிர மற்ற அனைவரும் 300க்கு மேல் எடுத்தவர்களே ,அதில் சிலர் இப்போது இவனது ரசிக கண்மணிகள்.385  மார்க் எடுத்த இம்ரானும் 380  எடுத்த ஹம்மாதும் ரோஸ் மேரியில் சேர்ந்து ப்ளஸ்டூவில் 1105,1125 மார்க் எடுத்தனர்.ரோஸ் மேரியில் ஸ்டேட் போர்ட் ஸ்கூலில் 460  மார்க்க எடுத்தாலே அட்மிசன் கொடுப்பார்கள்.மேலும் அவர்கள் படிக்கையில் மாத கட்டணம் நூறு ரூபாய் .ரோஸ் மேரியில் மாதம் நானூறு ரூபாய் [பத்தாம் வகுப்புக்கு] .இவனுக்கு உண்மையில் பள்ளியின் கல்வித்தரம் சரியில்லை என்றால் எங்களை அல்லவா அணுகியிருக்க வேண்டும்.கள்ளத்தனமாக கணக்கு கேட்க வேண்டியதற்கும் கல்வி தரத்திற்கும் என்ன சம்பந்தம்?
அடுத்து ,பள்ளிவாசலில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் நுழைந்தான்.ஆறாம் பண்ணையில் நடைபெற்ற எத்தனையோ நல்லது,கெட்டதுகளில் எவ்வித பங்கும் இல்லாத இவனுக்கு பள்ளிவாசல் விசயத்தில்  அப்படி என்ன ஈடுபாடோ தெரியவில்லை.ஒருதடவை வக்ப் அதிகாரி ஒருவர் கூறினார் ",இவன் என்னங்க சென்னை ஆபிஸ்க்கு போனால் அங்கு வந்து நிற்கிறான்,அங்கிருந்து நெல்லைக்கு வந்தால் எனக்கு முன்னாடி நெல்லை ஆபிசில் வந்து நிற்கிறான்.'"இவன் ஏன் இப்படி தேர்தலை கொண்டு வருவதற்கு இந்த பாடுபடுகிறான் என்று கூறினார்.இவன் கையில் ஏதோ ஒருவகையில்   காசு கிடைத்ததும் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் ஊரை ஒரு வழியாக்கி பள்ளியை இரண்டாக்கி ,மதரசாவை மூன்றாக்கியதோடு  தனது உடன்பிறப்புகளுக்கு  தஞ்சை,திருச்சி ,புதுகோட்டை ,ராமநாதபுரம் ,சென்னை,நெல்லை, தூத்து குடி  விநியோக உரிமைகள் கிடைக்கவும் ,அவன் கவுன்சிலராகி ஆட்டமும் ஆட்டையும் போட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பல இளைஞர்களை ஏமாற்ற என்னை துருப்பு சீட்டாக பயன்படுத்தியுள்ளான்.  
இவனுடைய சேவை ஆராம்பன்னைக்கு தேவை என்று சிலர் உடன்படாவிட்டால் வக்ப் தேர்தல் நடந்து இருக்காது.இவர்கள் வந்து என்ன சாதித்துவிட்டார்கள் ?ஒருவர் பார்த்த வேலையை இன்று ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் என்பது போல வருடம் மூன்று லட்ச ரூபாய் வருமானம் உள்ள பள்ளிக்கு பதினாலு நிர்வாககமிட்டி உறுப்பினர்களும் ,உள்ளூரில் ஆலோசகர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.பாளையில் ஒ.கா உட்பட மூன்று ஆலோசகர்கள் ,சென்னையில் இரண்டு அல்லது மூன்று ஆலோசகர்கள் .சாதித்தது என்னவோ? பாரியும் மூன்று லட்ச மதிப்பில் ஒரு வீடும் ,ஸ்கூல் பில்டிங்கில் தமாம் சகோதரர்கள் உதவியுடன் முதல் தளம் ,இரண்டு கடைகள் கட்டியது போக இருப்பு சுமார் ஒன்றை லட்சம் வைத்துள்ளார்.வக்ப் தேர்தலிலும் காசு விளையாடியது .வக்ப் தேர்தல் தவறுகள் பற்றி தனியாக எழுதுவோம்.

///இன்ஷா அல்லாஹ் முடிந்தால் Dr. யூசுப் அல் கர்ளாவி அவர்கள்
எழுதிய கருத்து வேறுபாட்டுக்கும், கருத்து முரண்பாட்டுக்கும், 
மனமுரண்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுகிறேன்.////
ஒசங்காச்சா மேற்கண்டவாறு தனது பிளாக்கில் எழுதியுள்ளான். 
இந்த எழுத்துலக மேதை அதை எப்போது எழுதப் போகிறதோ தெரியவில்லை.
ஆனால் அதற்குள் அவனது மேற்கண்ட வாசகங்களுக்கு ,உங்களுக்கு 
தெரிந்த தமிழ் அறிஞர்களிடம் அர்த்தம் கேட்டு சொல்லுங்களேன் .
இப்போது அரசியல்வாதிகள் என்றாலே சாக்கடையில் புரளும்
 சண்டாளர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம்.அதிலும் 
அவன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்றால் ஊரை அடித்து 
உலையில் போடவே என்பது தெரியாத ஒன்றல்ல .இன்னும் ஒருவன் 
சாராயம் வாங்கி கொடுத்து ,ஓட்டுக்கு காசு கொடுத்து,காசு கொடுக்கும் 
போதையில்,ஓட்டுபோட்டவனுக்கும் காசு கொடுக்கிறார்கள் என்றால்,
போலிங் முடிந்தபிறகும் மூன்று நாட்கள் யூனியன் ஆபிசை ,
குட்டிபோட்ட நாய் போல சுற்றி வருகிறான் என்றால் அதன் பொருள் என்ன?
ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ செலவழித்தால்,சேர்மன் தேர்தலில் 
அதை விட அதிகமாக காசுகிடைத்துவிடும்,அதன் பிறகு காண்ட்ராக்ட் 
கமிசன்,சேர்மன் தரும் வருடாந்திர கமிசன் எல்லாம் லாபம் என்று 
பழைய அனுபவஸ்தர் கூறிய யோசனையில் செலவழித்த ஒ.காச்சாவே!
நீ ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த பணத்தை 
ஏழைகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்.நீ கொள்ளையடிக்கவே ,
ஊரை இரண்டாக்கி ,ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் 
என்பது போல கொண்டாடி ,வழக்கம் போல ஜும்மாஜமாத்தை கூட்டாமல் 
சும்மா ஒரு ஜமாத்தை 
பெயரளவில் கூட்டி,அதில் வக்ப் தேர்தலில் ஊழல் பண்ண உதவிய உனக்கு 
நன்றிகடனாக ,உன்னை கவுன்சிலர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து ஆட்டம் 
போட்டாய். உனது அயோக்கியதனங்களுக்கு இறைவன் ஆப்பு வைத்தான்.
[ஒசங்காச்சாவின் சாதனை பட்டியல் நாளை வரும் இறைவன் நாடினால்,]

புதன், 25 ஜனவரி, 2012

உண்மையை நிருபிக்க குர்ஆன் வேதம்போதுமே ; கோர்ட்வாதம் வேண்டாமே

அவன் நேத்து சொன்னதை இன்று பொய் ஆக்கிட்டான்.( அவன் தொடரும் என்று போட்டதை தான் சொல்கிறேன்).
நான் உனது மானம் பற்றிய முழு தகவல்களையும் எழுதிவிட்டு அத்துடன் மானகெட்ட ஒசங்காச்சாவை பற்றியோ ,அவனது இத்துப்போன பிலாக பற்றியோ எந்த பதிலுரைகளும் இருக்காது என்ற கருத்திலே கூறி உள்ளேன்.இன்னும் இரண்டொரு நாளில் இன்சா அல்லாஹ் முடிவுக்கு வரலாம் . அதன் பின்னர் மானம் இல்லாத உனக்கு எதிர் கருத்து வழங்கினால் என்னை அல்லவா தவறாக நினைப்பார்கள்.வில்லங்க சர்டிபிகேட் 19/11/2011 இல் நீ கேட்டுள்ளதை பார்த்த்துக் கொள்க .
இவனுக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லாத ,சொல்லப்போனால் மற்ற அவனது சகோதரர்கள் மூவர்களைத்தான் எனக்கு தெரியும்.ஸ்கூல் கணக்கு கேட்ட நாளிலிருந்துதான் இவனை எனக்கு தெரியும். அவனாக என்னை பகைத்துவிட்டு நெருங்கிய உறவுடன் இருந்த அவனது உறவுகளையும் இவனால் என்னை பகைக்க வைத்த நீ என்னை அசிங்க படு என்று சொன்னாலும் பரவாயில்லை. குதிரை மீது சாணியை அள்ளிப்போட்டு அசிங்க படு என்று கழுதை சொன்னதாகவே எடுத்தக் கொள்கிறேன்.
///அப்புறம் எல்லா புகாரும் சொன்னாய். இன்னும் ஒன்னு பாக்கி அது கள்ளத்தொடர்பு. அதையும் ஏன் விட்டுவைக்கிறாய் ///
இந்த சால்ஜாப்புகள் எல்லாம் தேவை இல்லை ,நான் சொன்ன விசயங்களுக்கு மட்டுமே சத்தியம் செய்ய அழைத்தேன் , மீண்டும் மீண்டும் உனது வெற்று கூச்சலை நம்பும் சிலரிடம் உன்னை அடையாளம் காட்டவே அவ்வாறு அழைத்தேன் .இப்போது உன்னை நம்பிய சிலரும் உண்மை அறிந்திருப்பார்கள்.அதனால் எனது வேலை முடிந்துவிட்டது. 
'///ஆகவே பத்திர்ரிக்கையில் ஹைகோர்ட் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு போடுகிறது என்றாலே நில மோசடி நடந்துள்ளது என்பதே பொருள்.இதற்காக சர்வே நம்பர் தேடி, வில்லங்க சர்டிபிகட் காட்டு என்றால் அது என் வேலை இல்லை'' ///
இதைவிட ,இதற்கு அடுத்து நான் எழுதியதற்கே  இவன் பதில் சொல்லியிருக்க வேண்டும். பத்திரிக்கை செய்தியை நான் சொன்னது இதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக் மட்டுமே .இவனுக்கு அல்ல ,இவன் பதில் சொல்ல வேண்டியது சத்திய அழைப்புக்கு மட்டுமே. அதை லாவகமாக தவிர்த்துவிட்டு ,தனக்கு வாழ்வு கொடுத்த உறவை அசிங்கப் படுத்தவே மீண்டும் மீண்டும் கோர்ட் விசயத்தை கூறிக் கொண்டு இருக்கிறான் .
மாட்டிக்கிட்டான் ,ஹை மாட்டிக்கிட்டான் 'தப்பிக்கிறான் என்று உளறியவற்றுக்கு நான் இவனை தெரு கிறுக்கன் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டான் ,இறைவனுக்கே புகழ் உரித்தாகட்டும்.
எனது பல கேள்விகளுக்கு ஒ.கா பதில் சொல்லாததையும் நாளை வெளியிட்டு அத்துடன் இவன் முற்றிலும் புரக்கணிக்கப்படுவான். இன்சா அல்லாஹ் .

செவ்வாய், 24 ஜனவரி, 2012

நபி வழிக்கு சத்தியம் செய்ய வருமாறு அழைத்தேன்


////  ஹை...... சூப்பர் மாட்டிகிட்டான்.

   ஹை மாட்டிகிட்டான்....

SATURDAY, JANUARY 21, 2012


ஹய் மீண்டும் மாட்டிகிட்டான். ஆனா ஒண்ணுங்க 
அவன் கோபத்தில்தான் பொய்யை பொய் 
என்று நிறுபிக்கிறமாதிரி உளர்றான்.

திங்கள், 23 ஜனவரி, 2012

\ஒசங்காச்சா மானத்திற்கு மூணாம் நகரா


ஒசங்காச்சா என்னைப்பற்றிய கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று நான் ,அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து சத்தியம் செய்ய தயார் .அது போன்று அவன் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து அவன் சத்தியம் செய்யத்தயரா? மூணாம் நகரா அடிக்கப்படுகிறது 


ஒசங்காச்சாவின் மானத்தை கோலகாலத்துடன் அடக்கம் செய்ய அவரது கழக தோழர் மற்றும் குள்ள நரியின் சம்பாகூனி கூட்டம் ஆலோசனை நடத்தியது. அரசியல் தலைவர்களின் உடலை கடற்கரையில் அடக்கம் செய்யப்படுவது போல் நமது பாசத்திற்குரிய அண்ணன் மானத்தை கடற்கரையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆற்றாங்கரையிலாவது   அடக்கம் செய்யவேண்டும் என்றும் இரவில் மின்னொளியில் இடிமாங்கரையில் மையப்பகுதியில் அடக்கம் செய்யவும் தொளிக்கோடு தங்கள் அவர்கள் தனது இனிய குரலில் வகைவகையான பாத்தியாக்கள் ,அபூர்வ மற்றும் விசேஷ் துஆக்கள் ஓதவும் ஏற்பாடு செய்ய தீர்மானித்தார்கள் . இடிமாங்கரை மாநகராட்சி மேயரும் டாக்டர் கலைஞர் அவர்களின் திடீர் உடன் பிறப்புமான அவசியம் ஏற்பட்டால் வாழ்த்த வயதில்லை ,கலைஞரை வணங்குகிறோம் என்றும் பேனர் அடிக்கவும் தயாராக உள்ள ஒ.கா வின் மானத்தை அடக்கம் செய்ய சம்மிம் உட்பட பல்வேறு நண்பர்களும் கழக கண்மணிகள்,கழக மூக்குமணிகள் ,கழக குடல் ஈரல்மணிகள்,அனைத்து ஆடுகள் மாடுகள் கழுதைகள் நாய்கள் என்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.தங்களது தலைவர் ஒ.காவின் செத்துப்போன மானத்திற்காக பலர் கண்ணீரும் கம்பளைமாகவும் ,பனிக்காலம் என்பதால் சிலர் மூக்கு நீரும் கர்சிப்பாகவும் இருந்தனர்.மானம் என்னும் மையத்தை அடக்கம் செய்வதை ஒ.காவின் பண்ணை ந்யூஸ் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சரியாக பனிரண்டு மணியளவில் அடக்கம் செய்யப்படும்.
ஒ.கா வின் "மானம் "அதிகாலை 12 .05  க்கு அடக்கம் செய்யப்பட்டது.இடிமாங்கரை அரசு மரியாதைப்படி மூன்று கழுதைகள் விண்ணை நோக்கி பதிமூன்று முழக்கங்கள் முழங்க ,மண்ணை நோக்கி பதினோரு விட்டைகள் போட அடக்கம் அமர்க்களமாக நடந்தது.
அதன் பின்னர் நாளை ஒ.காவின் செத்துப்போன மானம் பற்றிய வாழ்க்கை குறிப்பு இடம்பெறும் .அதன் பிறகு மானம் செத்துப்போன ஒசங்காச்சா பற்றி இனி எந்த   ஒரு விமர்சனமும் இங்கே இடம் பெறாது என்றும் அவனது இத்துப்போன வெண்ணை ந்யூஸ் க்கும் எந்த பதில்களும் இருக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன் 

சனி, 21 ஜனவரி, 2012

இரண்டாம் நகரா

ஒசங்காச்சா என்னைப்பற்றிய கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று நான் ,அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து சத்தியம் செய்ய தயார் .அது போன்று அவன் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து அவன் சத்தியம் செய்யத்தயரா?ஒரு நாள் மட்டுமே அவகாசம் .பதில் இல்லையெனின் ,மூன்றாம் நகரா அடித்து அவனது மானம் நாளை கள்ளடக்கம் செய்யப்படும்  

வெள்ளி, 20 ஜனவரி, 2012

ஒசங்காச்சாவின் தன்மானம் ஐஸ் பாக்ஸில் ,,,,,

மானங்கெட்ட ஒசங்காச்சாவிற்கு இரண்டாம் நகரா 
                 நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒசங்காச்சாவிற்கு உனக்கு மானம் இருந்தால் நீ ஏன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்கிறேன்.அதேபோன்று நான் உன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளையும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்ய வேண்டும் இதை பள்ளிவாசலில் வைத்து நடத்த வேண்டும் என்று கூறி இருந்தேன் ,அதற்கு இதுவரை பதில் சொல்லாமல் நான் உருப்படியான வேலைகளை பார்க்க போகிறேன் என்று கதைவிட்டு ஓடிப்போன ஒசங்காச்சா மீண்டும் உருப்படி இல்லாத வேலைக்கு வந்துள்ளான்.
 ////இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் பள்ளிவாசல் தென் பகுதியை மட்டும் விரிவாக்கம் செய்து பள்ளி பூராவும் மார்பில் போட போகிறார்கள் . மேலும் பாத்ரூம் மேற்கே தள்ளி வடபக்கம் புதியதாக அமைக்க போகிறார்கள். அதர்காக கொட்டேசன் வாங்குவது, பொதுக்குழு கூட்டி அனுமதி வாங்குவது பற்றி நிர்வாகத்தில் பேசி வருகிறார்கள். அந்த கட்டிட முயற்சி வெற்றிகரமாக அமைந்திட அனைவரும் துஆ செய்வோம்.////po
 இவ்வாறு உளறிய தானாகவே பள்ளிவாசலின் ஆலோசகர் என்று அறிவித்துக் கொண்ட ஒசங்காச்சா ,இவன் அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை ஆக சத்தியம் செய்வதிலிருந்து திசைதிருப்பவே இவ்வாறு கூறியிருக்கிறான் ,இப்போது இரண்டு மாதங்களாகி விட்டது மறந்திருப்பார்கள் என்று மீண்டும் தனது சம்பாகூனி கூட்ட தலைவர் குள்ளநரியின் ஆலோசனையில் எழுத ஆரம்பித்துள்ளான்.  ஏற்கனவே ஸ்கூல் கைக்கு வந்தால் பெண்கள்  மத்தியில் பந்தா காட்டலாம் என்ற நிரந்தரகனவு நிராசையாகி விட்ட நிலையில் ;
 ஊரை அடித்து உலையில் போட்ட [செய்தி தினசரி பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது ]அடுத்தவர் காசை செலவழித்தும் ,மேலும், தானாகவே ஆலோசராக அறிவித்துக் கொண்ட ஜமாத்தின் ஆதரவுடனும் ,என்றும் மாறாத திமுகவின் வாக்கு வங்கி யாக இருந்த ஆறாம்பண்ணை யும் நம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போன தோடு,தனது கவுன்சிலர்  கனவு பகல் கனவாகி விட்டதோடு , நான் சத்தியம் செய்ய விட்ட அழைப்பும் அவன் மனதை நோகடித்து ,சென்னை புத்தக கண்காட்சியில் அவன் வாங்கியுள்ள புத்தகமே அவனது தற்போதைய நிலைக்கு சாட்சி .பொதுவாகவே ஒவ்வொருவரும் புத்தக கண்காட்சிக்கு சென்றால் தங்களது கொள்கை சார்ந்த மற்றும் விருப்பமுள்ள புத்தகங்களை வாங்கி படிப்பதே வழக்கம்.
///இதில் சமுதாய குழப்பம் என்பது இந்த சமுதாயத்தை திருத்த தான்மட்டுமே பிறந்திருப்பதாக மற்றவர்கள் சொல்வதை உண்மையென்று நம்பி, சமுதாயத்தை திருத்த போவதாக சொல்லி கிளம்பி கடைசியில் மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுவது. மேலும் இந்த மாதிரி சைக்கோ ஆகிரவர்களால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குடும்பத்தினரும், சமுதாயமுமே. இதனால் மனச்சிதைவுக்கு ஆளான சைக்கோ மக்களால் கவனிப்பாரற்றும், ஒதுக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் இவர்களை அச்சத்தோடும் கூட (உறவினர்கள் உட்பட) நோக்குகிறார்கள்.//
அவனது வார்த்தைகள் அவனுக்கு உண்மையாக உள்ளதை  அவனை அறியாமலே அவன் ஒப்புக் கொள்கிறான் ,பாருங்கள் நான் ஊரை திருத்தப் போவதாக யாரிடமும் சொல்லவில்லை. நான் ஸ்கூலை கவனிக்கவே சென்றேன்.மற்ற எந்த ஊர் விசயங்களிலும் தலையிடவில்லை. 2003  இல் பள்ளி புனரமைப்பு கட்டிட நிர்வாக குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் செயல்பட்டு வந்தேன். பீஜே ஏகத்துவ பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கி தமுமுக போன்ற அமைப்பில் இருந்ததால் செயல்படாத ஜாக்கின் ஆதரவாளராக இருந்து வந்தேன். பின்னர் பீஜே அந்த அமைப்பில் இருந்து விலகி தவ்ஹித் ஜமாஅத் ஆரம்பித்த பிறகு அதில் இணைந்து மார்க்க கடமைகளான ஏகத்துவ கொள்கையை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, பித்ரா வழங்குவது ,ரத்த தானங்கள்செய்வது போன்ற வேலைகளை தவ்ஹித் ஜமாஅத் இளைஞர்களோடு செய்து  வருகிறேன்.அதற்கு முன்னர் ஊருக்கு முதலாக பஸ் கொண்டு வருவதில் முழு முயற்சிகளும் முஸ்லிம் இளைஞர் முன்னணி என்ற அமைப்பு செய்தது. அதில் மறைந்த லெப்பை சாகுல் ஹமிது என்பவரின் பணி குறிப்பிடத்தக்கது. மீலாது விழாக்களும் அந்த அமைப்பே நடத்தி வந்தது.அவர்கள் ஒதுங்கிய பிறகு காயிதே மில்லத் நற்பணி கழகம் ஆரம்பித்து செயல்பட்டு வந்தோம்.அதன் ஆலோசகராக மறைந்த பியே மதார் அவர்கள் இருந்தார்கள். அவரின் முயற்சியில் 16E பஸ் வந்தது. கவனிப்பாரற்ற சாலை பழுதுகளை சீர்செய்திட அவ்வப்போது மனக்கரை சென்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி நிரப்புவது, ஒடை மரங்களை வெட்டுவது ,பள்ளிவாசல் மராமத்து வேலைகளுக்கு திருவைகுண்டத்தில் மா.வண்டியில் சென்று கூலி இல்லாமல் சிமென்ட் எடுத்து வருவது மற்றும் மீலாது விழாக்கள் நடத்தி வந்தோம் .மீலாது விழாக்கள் நடத்தும் போதுதான் சில ஆலிம்களின் உண்மைகள் பற்றி புரிய வந்தது.
அவர்கள் மீது ஏற்ப்பட்ட வெறுப்பில் ஒருதடவை மீலாது விழாவுக்கு ஆலிம்களை அழைக்காமல் சதக் பேராசிரியராக இருந்த பாரூக் அவர்களை அழைத்து வந்தோம.
சில கள்ள மாடுகளையும் கண்காணித்து அதனால் பல ஏச்சு பேச்சுக்களையும் வாங்கி கட்டிக் கொண்டு அவர்களை ஊரைவிட்டு காலி பண்ணினோம். 1985  இல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் இளைஞர் அணியை ஆதரித்து செயல்பட்டேன்.தேர்தலுக்கு பிறகு போட்டியிட்டவர்கள் பகைமை மறந்தார்கள். என்னால் எனது குடும்பமும் எதிர்த்தரப்பால் பகைமை காட்டப்பட்டோம்.

ஆனால் ஒசங்காச்சா ஊருக்காக என்ன செய்தான் ? அவன் ஊருக்கு மற்றவர்களின் ஸ்கூலின் கணக்கை கள்ளத்தனமாக அந்நிய பெண்ணிடம் சென்று கேட்கவே வந்தான் .அதன் பின்னர் தனது உறவு வக்ப் செலவ்வாக்கால் பள்ளிவாசலுக்கு மானியம் எதுவும் வாங்கித்தராமல் வக்ப் தேர்தலை கொண்டு வந்து ஊரின் ஒற்றுமைக்கு முதல் வேட்டு வைத்தான்.அதில் கள்ளத்தனமாக வெற்றிபெற்றார்கள். ஊரில் சுன்னத் ஜமாஅத் என்று பகைமை பாராட்ட ,அதை தொடர தனக்கு என்று ஒரு சம்பாக்க் கூனி கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தவ்ஹித் ஜமாத்த் காரர்களை கிண்டல் செய்து சண்டைகளை மூட்டி வந்தான் .நான் அப்போதே சொல்லியுள்ளேன் .இவன் வக்ப் தேர்தலோடு பகையை வளர்த்து பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வழி வகுக்கிறான் என்று. பஞ்சாயத்து தேர்தல் வந்ததும் வழக்கத்திற்கு மாறாக ஜும்மா நாள் அல்லாத ஒருநாளில் கூட்டத்தை கூட்டி அதில் அவனை கவுன்சிலர் வேட்பாளராக தேர்தெடுக்க வைத்துள்ளான். நான் தவ்ஹித் காரன் என்று சொல்லி சில அரைகுறை தவ்ஹித் காரர்களையும் ஏமாற்றி இப்போது நான் திமுக காரன் என்கிறான் .ஆறாம்பண்ணை ஜமாத்துக்கும் வேட்டு வைத்து ,பஞ்சாயத்து தேர்தலிலும் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து இப்போது ஆரம்பண்ணை திமுகவிலும் வேட்டு வைக்க வந்துவிட்டான்.இவன் வந்த முதல் தேர்தலிலே ஆறாம்பண்ணை  திமுக மண்ணை கவ்விவிட்டது.
நான் ஊரை திருத்த வந்ததாக கூறும் இவன் ஊருக்கு எதற்கு வந்தான்? நான் ஸ்கூலை கவனிக்க வந்தேன் என்று கூறுகிறேன். இவன் எதற்காக வந்தான்? 
இன்சா அல்லாஹ் இரண்டாம் நகரா நாளை ஒலிக்கும் .அதுவரை ஒசங்காச்சாவின் தன்மானம் ஐஸ்  பாக்ஸில் ,,,,, 
அரசியல் வாதிகள் சவ ஊர்வலத்தை   பிரமானடமாக நடத்துவதற்காக கேரளா செண்டை மேளத்தை அழைத்து வருபது போல் ,ஒசங்காச்சா தனது மானத்தை அடக்கம் செய்து பல வகையான பாத்தியாக்கள் ஓதி கொண்டாட தொலிக்கோடு தங்களை அழைத்துள்ளதால் ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது 

புதன், 18 ஜனவரி, 2012

ஒசங்காச்சாவின் மானத்திற்கு இரண்டாம் நகரா 


நாளை ஒலிக்கும்.முதல் நகராவிர்க்கு பிறகு 

இரண்டுமாதங்கள் கழித்து இரண்டாம்  நகராவும் ,

ஒரு நாள் கழித்து மூணாம் நகராவும் 

ஒலிக்கப்பட்டு 

ஒசங்காச்சாவின் மானம் நல்லடக்கம் 

செய்யப்படும்.அனைத்து வகை பாத்தியாக்களும் 

அபூர்வ துவாக்களும் செய்யப்படும்.

அனைவரும் வாரீர் ! வாரியளோடு வாரீர் !!