வெள்ளி, 11 நவம்பர், 2011

குடிகாரனிடம் குடிகாரன் தவ்ஹித்வாதியிடம் தவ்ஹித்வாதி,அவ்வாறெனின்,

,,
அன்புள்ள சகோதரர்களே ,அஸ்ஸலாமு அழைக்கும் ,
கடந்த ஈதுல் அல்ஹா முடிந்த இரவு கூட்டு குர்பானியாக நமது மக்கள் கொடுத்த 112  பங்குகளுக்காக 16  மாடுகளும்,டிஎன்டிஜே தலைமை மூலம் ஒருமாடும் ஆக பதினேழு மாடுகளும் குர்பானி செய்யப்பட இருந்தது .ஆனால் எட்டு மணியளவில் கடும் இடி,மின்னல், உடன் மழை பெய்ய துவங்கியது.பதினேழு மாடுகள் எப்படி குர்பானி கொடுத்து மக்களுக்கு அதிகாலையில் விநியோகிக்க போகிறோம் என்று அஞ்சினோம்.வழக்கமாக வேடிக்கை பார்க்கும் மக்கள் உட்பட அநேகர் வரவில்லை.பத்து பேர்களே இருந்திருப்போம்.பதினோரு மணியாகியும் மழை விடவில்லை.தோலுரிப்பவர்களும் மேலாப்பாலயத்தில் இருந்து வழி தெரியாமல் மனக்கரை அருகே திண்டாடிக்கொண்டு இருந்தனர் .விசாரிக்க அங்கு ஆட்கள் இல்லை.அவர்களை அழைத்து வர கொட்டும் மலையில் பஸ்ட் இப்ராஹிமும் சல்மானும் டூ வீலரில் மனக்கரை சென்றனர்.இதற்கிடையே ,சமயலறை சாவி மட்டுமே கொடுத்திருந்தனர்.மண்டப சாவியை கேட்க சென்றவரிடம் செயலாளர் சாவி கொடுத்தாயிற்று என்று கூறிவிட்டார் .சாவி வாங்கிய காஜாவை தேடி பிடித்தபிறகு தன்னிடம் மண்டப சாவியை செயலாளர் திருப்ப வாங்கிவிட்டதாக கூறினார்.இதனால் கறார் செயலாளருக்கு சில ஏச்சுக்கள் விழுந்தது.தொ.வ.செயலாளரை இந்த இடத்தில் குறை காணவில்லை .இருப்பினும் பரபரப்பான சூழ் நிலையில் ஏசுவது இயல்பு.அதன் பின்னர் மண்டப சாவி வாங்கி வந்த பிறகு மாடு உறிப்பு துவங்கியது .அதிகாலை ஐந்து மணியளவில் பங்குகளை விநியோகித்தோம்.காலை பத்து மணிக்கு அனைத்து வேலைகளும் முடிந்து சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.துணைத்தலைவர் அப்துல்,பஸ்ட் இப்ராஹீம் ,காமு.இஸ்மாயில்,ஹாஜா சல்மான்,சி.அப்துல்,எ.மைதின் [வ.கட்டி],முஹம்மது அலி,உவைஸ் ,செய்து ஆகியோர்களின்  கடும் உழைப்பினால் அருமையாக முடிந்தது.புகழ் இறைவனுக்கே !
மறுநாள் இரவு எட்டு மணியளவில் பகிரங்க குடிகாரர் ஈசாவிடம் நமது இளைய சகோதரரர்கள் மாடுஅறுப்பு    நிகழ்வின் போது சாவி வாங்க திண்டாடியதாக தொ.வ.செயலாளர் பற்றி கூறியுள்ளனர் .அந்த சமயத்தில் அவர் மகன் வர அவனை ஈசா அநாகரிகமான வார்த்தைகளால் சாடியுள்ளார்.இது கேட்டு அதன் மறுநாள் நான் இசா தொழுது விட்டு வரும் வேளை,தொ.வ.செயலாளர் ,ரசாக் கடையில் நின்று கொண்டு எனக்கு ஜாடை பேசினார்.நானும் நின்று கொண்டு கவனித்தேன்.அவர் இந்த குடிகாரனுகேல்லாம் பயப்படமாட்டேன் என்றும் நேற்று அவருக்கு தெரிந்து இருந்தால் அவனை உதைத்திருப்பேன் என்றும்  மேலும் நானும் பழைய குடிகாரன்தான் என்றும் பல குடிகாரர்களை கருங்குளத்தில் பார்த்தவன்தான் என்றும் கூறினார் தூண்டி விட்ட அவனது அண்ணன்களை போலீசில் புகார் கொடுக்கப் போவதாகவும் கூறினார்.அத்துடன் நில்லாது ஈசாவின் சகோதரரர் சாகுலிடமும் நானும் குடித்தவன் தான் என்றும் இனி சும்மாவிடமாட்டேன் என்றும் தூண்டிவிட்டவர்கள் காசியார்இப்ராஹீம் ,பஸ்ட் இப்ராஹீம் , பல்க் ஹாஜி ஆகிய மூவரும் தான் என்றும் கூறி உள்ளார்.  இவர் சொல்லுவதை பார்த்தால் இவர் கருங்குளத்தில் இருக்கும் போது மட்டும் குடித்தாரா? அல்லது இப்போதும் குடித்துள்ளாரா என்பது புரியவில்லை .என் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார் . அதனாலே என்னைப் பற்றி அதிகம் பேசுகிறார்.நன்று.இங்கு குடிகாரனைப் பார்த்து நானும் குடிகாரன் என்று கூறியுள்ளார். நேற்று சலீமிடம் நானும் தவ்ஹித்வாதி என்று கூறியுள்ளார்.நல்ல வேளை ,கரப்பன் செயராத்து மகன் இவரிடம் செல்லவில்லை .சென்றால் இவர் என்ன சொல்லியிருப்பார் .அது உங்கள் யூகத்திற்கு விட்டுள்ளேன்.ஆக நேற்றைய குடிகாரர் இன்றைய பள்ளி நிர்வாக செயலாளர் .இன்றைய குடிகாரர் ஈசா நாளைய செயலாளரா?
யாரோ ஒருவர் சொன்னதை என் மீது பழி போடும் தொ.வ.செயலாளர் மர்கஸ் விசயமாக சலீமிடம் சொன்னவற்றில் எத்தனை மிலிகிராம் உண்மை இருக்கும் /என்பதை சிந்தித்து பாருங்கள் .முந்தைய நாளில் சலீமிடம் பொய்களை அளந்து ,அளந்து கொடுத்ததற்கு மறுநாள் கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.